Sunday, July 22, 2012

தண்ணீரில் கண்ணீர் !!!!!!!!!!!!!.........
      தண்ணீரில் எங்கள் கண்ணீர் கரைவதால் எங்கள் கண்ணீர் உங்களுக்கு தெரியவில்லையா......... நான் ஆற்றங்கரையில் வாழும் என் சொந்தங்களை பற்றி பதிவு செய்ய விரும்பி செய்யும் பதிவே இது.........  கர்நாடகம், ஆந்திரம், கேரளத்தின் வஞ்சிப்புக்கு பிறகு மீண்டும் கேரளத்தின் வஞ்சிப்புக்கு ஆளாக இருக்கிறோம்.... எங்கள் கண்ணீர் நீரோடு கரைவதால் புலப்படவில்லையோ இல்லை எங்கள் கண்ணீர் உங்களை ஒன்னும் செய்து விடாது என்ற துணிச்சலோ.... நம் முதல்வர் ஓய்வெடுக்க நேரம் தேடவும் முன்னாள் முதல்வருக்கு டெசோ கொசோ என்று எதோ நேரம் கடத்தவே சரியாக  இருக்கிறது  மீதம் உள்ளவர்களோ நாங்கள் பஞ்சுமெதையில் புரள்வதை போல் அடுத்தவர்களுக்காக நேரம் ஒதுக்கவே சரியாக உள்ளது;...... நாங்கள் யாரையும் குறை கூறவில்லை எங்கள் இயலாமையை எடுத்துரைக்கிறோம்... முல்லை பெரியாரை அபகரிக்கும் வேலையோடு சிறுவானியை அபகரிக்க திட்டம் தீட்டிஆயிற்று முலையில் கிள்ளி எரியவேண்டியதை வளர்த்து பின் அவதிப்படுவது நம் வாடிக்கை ஆகிவிட்டது... ஏற்கனவே கேரளத்தை ஒட்டிய தமிழக பகுதியை குப்பை கூலம் ஆக்கியாச்சு மணலை சுரண்டி பாலைவனம் ஆக்கியாச்சு அடுத்து தண்ணீரை சுரண்டி இடுகாடு ஆக்கவேண்டியது தான் பாக்கி... 
    சமுக வலைதளத்தை தாறுமாறாக உபயோகிக்கும் நம்மால் புரட்சி அல்ல இதை பற்றி புரிதலை உண்டாக்க கூட திராணி இல்லாமல் இருப்பது வேதனையே....... எங்களை காணுங்கள் எங்கள் வாழ்வு வளாமானால் தான் உங்களால் நிம்மதியாய் உணவை சுவைக்க இயலும்........ எண்களின் குரலோடு உங்களின் குரலை ஓங்கி எழுப்புங்கள் விவசாயியை துன்புருத்திவிட்டு நாம் வாழ்வது இயலாது........... நாம் சக்தியை உபயோகித்து ஏதோ சில தடுப்புகளை ஏற்படுத்துவோம்............

தண்ணீரில் எங்கள் கண்ணீரின் உவர்ப்பு சுவையோடு பருகாமல் எங்கள் வியர்வையின் இனிப்போடு பருக விடுங்கள் .............
வாழு வாழவிடு 
ஒருங்கிணைவோம் ஒற்றுமையை போற்றுவோம்     


1 comment:

  1. நல்ல பதிவு ........ எழுத்துப் பிழைகளை தவிர்த்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்

    ReplyDelete