Sunday, August 12, 2012

ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்?????????

   
          
என் இனிய இந்திய நண்பர்களுக்கு இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்......60+ ஆண்டுகள் ஆகின்றது நாம் அந்நிய கொடியை அகற்றி..... இத்தனை ஆண்டுகளில் மண்ணில் நுழைந்தோம் விண்ணில் பாய்ந்தோம் சந்தோசமே. என்னதான் விண்வெளியில் கால்பதித்தும் அணுவை பிளந்து சாதனை படைத்திருந்தாலும் நம் மண்ணின் மணத்தை மறந்தோம்..... விவசாயத்தை தான் சொல்கிறேன் எத்தனையோ சாதனை செய்தும் சோதனை செய்தும் வெற்றி பெரும் நாம் விவசாயத்தை முன்னெடுத்து செல்ல தயங்குவது ஏனோ....
  இத்தனை வருடமாகியும் இன்னும் சாதிய கொடுமையை ஒழிக்க முடியவில்லையே இன்னும் பல ஊர்களில் இரட்டை குவளை முறையும் சாதிய சுவர்களையும் ஓடைக்க முடியவில்லை.. இதனால் ஏற்படும் கொலைகளுக்கு கௌரவ கொலைகள் என்று அடையாளம் வேறு ......
     படிப்பும் சுகாதாரமும் அதுக்கு மேல இருக்கு கல்வியையும் மருத்துவத்தையும் வியாபாரம் ஆக்கிவிட்டு குடியை அரசுடமை ஆக்கிவிட்டோம்........

அப்போ நாடு முன்னேறவே இல்லையா யார் சொன்னது அமெரிக்க போன்ற வல்லரசு என்று கூறிகொள்ளும் நாடுகள் சுமார் 100 ஆண்டுகளில் அடைந்த  வளர்ச்சியை நாம்  அரை நூற்றாண்டில் அடைந்தோம் இவ்வளவு வேற்றுமைகள் ஒளிந்திருந்தும் இன்னும் சிதறாமல் இருக்கிறோம் ஒற்றுமையே நம் வலிமை......வேற்றுமையில் ஒற்றுமை குறைகளை களைய பாடுபடுவோம் களைகளை அகற்றுவோம் முன்னேறுவோம் கம்பீரமாய்........

இனிய சுதந்திர நாள் நல் வாழ்த்துகள்