Sunday, July 29, 2012

விளையாடுவோம் கொண்டாடுவோம் : :

விளையாடுவோம் கொண்டாடுவோம் : :
      தொடங்கியது ஒலிம்பிக் திருவிழா கூடவே தொடங்கிவிடும் நம் புலம்பலும் இந்தியாவின் பதக்க வேட்டையை பார்த்து.  நமது அண்டை நாடோ பதக்கத்தை அறுவடை செய்து கொண்டிருக்கும், நாமோ அவர்கள்  அறுவடை செய்யும்போது சிந்துவதையும் சிதறுவதையும் எடுத்துக்கொண்டு வருவோம். போட்டி முடிந்தவுடன் குழு அமைத்து குளிர்பானம் அருந்தி சில நாள் ஓட்டுவார்கள்..
      வீரர் வீராங்கனைகளை குறை கூறி என்ன பயன் அவர்களின் ஆடைகளைகூட இன்னும் நம்மால் தரமாய் தர இயலவில்லை. வில்வித்தையில் உலக தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் தீபிகா குமாரி நிலைமை யாவரும் அறிந்ததே வாழ்கை நடத்த வழியில்லாமல் வில்லை விற்ற கொடுமை, ஆனால் அதே ஊர்க்காரரான கிரிக்கெட் வீரரோ கோடியில் புரள்கிறார். நம் தேசிய விளையாட்டான ஹாக்கியோ இன்னும் மட்டமான நிலையில் உள்ளது ஹாக்கி பயிற்சி மேற்கொள்ளும் இளைஞர்களுக்கு அழுகிய பழத்தில் பழச்சாறு.இப்படி இருக்க அவர்களுக்கு முழு விளையாட்டு விளையாட சத்து எங்க இருக்க போகுது.
   சரி அரசாங்கத்திடம் மட்டும் தான் தவறா இந்தியா பதக்கம் வாங்கல வாங்கல என ஆதங்க படும் பெற்றோர்களே ஏன் உங்கள் பிள்ளை ஒரு விளையாட்டு வீரனாகவோ வீராங்கனையாகவோ வர நீங்கள் ஏன் அனுமதிப்பதில்லை அட போருக்கு அனுப்பாதீங்க விளையாட கூடவா. இன்றைய குழந்தைகள் கணினியுடன் விளையாடும் நேரமே அதிகம். வேண்டுமென்றால் பிற்காலத்தில் ஒலிம்பிக் போட்டி கணினிமயம் ஆனால் நாம் பதக்கம் வெல்ல வாய்ப்பு பிரகாசமோ..
                                       இனியேனும் வீரர்களை குறை கூறுவதைவிட அவர்களுக்கு என்ன செய்யலாம் என்று அரசாங்கம் சிந்திக்கட்டும் நம் பிள்ளைகளை விளையாட்டு வீரர் ஆவதை வளர்ப்போம்     .....

      விளையாட்டை வளர்ப்போம் விளையாட்டை போற்றுவோம்........ விளையாட்டை போற்றுதும் போற்றுதும்


Thursday, July 26, 2012

வருத்தம் தெரிவிப்பதை தவிர வேற என்ன செய்ய முடியும்

   கனத்த இதயத்துடன் இதை எழுதுகிறேன் நேற்று ஒரு பச்சிளம் குழந்தை பேருந்தில் இருந்த துளையில் விழுந்து அதே பேருந்தின் சக்கரத்தில் தன் உயிரை இழந்துள்ளது, பொதுமக்கள் ஆவேசத்துடன் பேருந்தை கொழுத்திவிட்டு இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டு திரும்புவதுடன் அந்த நாளை கடந்து விடுவார்கள். ஆனால் நாழி இதே போல் இன்னொரு குழந்தைக்கு ஏற்படாதா.... தாளாளரின் பதில் எவ்வளவு அலட்சியம் உடையது பேருந்தை தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்த அடிபடையில் விட்டு இருந்தோம் அதற்க்கு நாங்கள் எப்படி பொறுப்பாக முடியும்... அந்த பேயை அங்கேயே சங்கை நெரித்து கொன்றிருக்க வேண்டாம்.
  என்ன செய்தால் இவர்கள் திருந்துவார்கள் இது கட்டளை இல்ல அக்கறை அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களை நிறுத்திவிட்டு வேற பள்ளிகளில் சேருங்கள்  ... அடுத்த வருடத்தில் இருந்து அந்த பள்ளியை புறக்கணியுங்கள் அரசாங்கத்தில் போராடி பள்ளியின் அங்கிகாரத்தை தடுக்க போராடுவோம்..........
        மன்னிச்சிக்கோ சுருதி என்னால் உனக்கு இரங்கல் தெரிவிப்பதை விட  உனக்காக எது செய்ய இயலவில்லை இந்த முதுகேளும்பட்ட்ற நாட்டிலும் மாநிலத்திலும் கிடைத்த சாபம் .......
உன் ஆன்மா சாந்தி அடையட்டும்


Tuesday, July 24, 2012

சேவையின் சோதனை


     பெட்ரோல் விலைக்கு நாடு முழுவதும் எழும் கண்டனத்தில் எள்ளளவு கூட எழாதது வேதனையே சேவை வரி விதிப்புக்கு. அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவிக்க மறந்துவிட்டனரா இல்லை மறைதுவிட்டனரா தெரியவில்லை... சேவை வரி என்ற பெயரில் நம்மை ஆளும் கொள்ளைகாரர்கள் பணம் பிடுங்க ஆரம்பித்தாயிற்று இதுக்கும் நம் பதில் மௌனமே. அட ஆமா 24 ருபாய் இருந்தாலே ஏழை இல்லை என்று சொன்னதற்கே நாம் ஒன்றும் கூறாமல் மௌன சாமியாராய் வாழ்கிறோம்... இனி நாம் வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் 50 இல் இருந்து 100 ருபாய் வரை கூடும் மாத வரவு செலவு கணக்கில் 500 இல் இருந்து ஆயிரம் கூடும். இதை பின்னூட்டி அறியாதவர்களுக்கு தெருவியுங்கள்
சட்டை சுழற்ற்றும் நேரத்தில் சுழற்ற்ற மறக்காதீர்



Sunday, July 22, 2012

தண்ணீரில் கண்ணீர் !!!!!!!!!!!!!.........
      தண்ணீரில் எங்கள் கண்ணீர் கரைவதால் எங்கள் கண்ணீர் உங்களுக்கு தெரியவில்லையா......... நான் ஆற்றங்கரையில் வாழும் என் சொந்தங்களை பற்றி பதிவு செய்ய விரும்பி செய்யும் பதிவே இது.........  கர்நாடகம், ஆந்திரம், கேரளத்தின் வஞ்சிப்புக்கு பிறகு மீண்டும் கேரளத்தின் வஞ்சிப்புக்கு ஆளாக இருக்கிறோம்.... எங்கள் கண்ணீர் நீரோடு கரைவதால் புலப்படவில்லையோ இல்லை எங்கள் கண்ணீர் உங்களை ஒன்னும் செய்து விடாது என்ற துணிச்சலோ.... நம் முதல்வர் ஓய்வெடுக்க நேரம் தேடவும் முன்னாள் முதல்வருக்கு டெசோ கொசோ என்று எதோ நேரம் கடத்தவே சரியாக  இருக்கிறது  மீதம் உள்ளவர்களோ நாங்கள் பஞ்சுமெதையில் புரள்வதை போல் அடுத்தவர்களுக்காக நேரம் ஒதுக்கவே சரியாக உள்ளது;...... நாங்கள் யாரையும் குறை கூறவில்லை எங்கள் இயலாமையை எடுத்துரைக்கிறோம்... முல்லை பெரியாரை அபகரிக்கும் வேலையோடு சிறுவானியை அபகரிக்க திட்டம் தீட்டிஆயிற்று முலையில் கிள்ளி எரியவேண்டியதை வளர்த்து பின் அவதிப்படுவது நம் வாடிக்கை ஆகிவிட்டது... ஏற்கனவே கேரளத்தை ஒட்டிய தமிழக பகுதியை குப்பை கூலம் ஆக்கியாச்சு மணலை சுரண்டி பாலைவனம் ஆக்கியாச்சு அடுத்து தண்ணீரை சுரண்டி இடுகாடு ஆக்கவேண்டியது தான் பாக்கி... 
    சமுக வலைதளத்தை தாறுமாறாக உபயோகிக்கும் நம்மால் புரட்சி அல்ல இதை பற்றி புரிதலை உண்டாக்க கூட திராணி இல்லாமல் இருப்பது வேதனையே....... எங்களை காணுங்கள் எங்கள் வாழ்வு வளாமானால் தான் உங்களால் நிம்மதியாய் உணவை சுவைக்க இயலும்........ எண்களின் குரலோடு உங்களின் குரலை ஓங்கி எழுப்புங்கள் விவசாயியை துன்புருத்திவிட்டு நாம் வாழ்வது இயலாது........... நாம் சக்தியை உபயோகித்து ஏதோ சில தடுப்புகளை ஏற்படுத்துவோம்............

தண்ணீரில் எங்கள் கண்ணீரின் உவர்ப்பு சுவையோடு பருகாமல் எங்கள் வியர்வையின் இனிப்போடு பருக விடுங்கள் .............
வாழு வாழவிடு 
ஒருங்கிணைவோம் ஒற்றுமையை போற்றுவோம்     


பகுத்தறிவென்பது யாதெனில் ???????????
    நீண்ட நாளாய் எனக்குள்ளும்  மற்றவர்களிடமும் வினவும் வினா.......... ஆனால் சரியான விடையை கூற யாரும் இல்லை....... மீண்டும் பெரியாரே வந்தால் ஒழிய...... சரி நான் என்னோட பகுத்தறிவின் புரிதல்க்கு வருகிறேன்... என் கண்ணோட்டத்தில் பகுத்தறிவென்பது கடவுள் மறுப்பு என்பதில்லை மூட நம்பிக்கை எதிர்ப்பே என நான் நினைக்கிறேன்....    பலநேரங்களில் பெரும் படிப்பை படித்தவர்க்கு பகுத்தறிவு என்பது துளியும் இல்லை என்று நிருபித்துவிடுகின்றனர்... சமிபத்தில் ஒரு போலி துறவியின் மீது பல நிலைகளில் இருந்தும் புகார்மழை புகார் அளித்தவர்கள் தங்களை பெரும் அறிவாளிகளாக காட்டி கொள்கின்றனர்.... நான் நாட்டின் பெரிய பொறியியல் கல்லூரியில் தொண்ணூறுகளின் துவக்கத்தில் படித்திருக்கிறேன் அப்போ நான் எவ்ளோ பெரிய அறிவாளி என்று மார்தட்டிவிட்டு அந்த போலி துறவி என்னை மூளை சலவை செய்து விட்டார் என்று புலம்பல். அவ்வளவு பெரிய அறிவாளி உங்கள் அறிவை ஒருவர் சலவை செய்யும் அளவுக்கு உங்கள் படிப்பறிவு இருக்கிறது....... இதில் தவறு யார் பக்கம் வெறும் புத்தக புழுக்களாக பகுத்து பார்க்க முடியாத அளவுக்கு இருக்கும் நம் கல்வியா....... கடவுளர்க்கும் மனிதர்களுக்கும் வித்தியாசம் தெரியாமல் இருக்கும் நம் மக்களுக்கா..........    இல்லை மக்கள் பகுத்தறிந்தால் தங்கள் பிழைப்பை ஓட்ட முடியாது என்று கருதும் அரசியல்வாதிகளா......... இனியொரு விதி செய்வோம் புதிய விடியலை காண்போம் ................