Saturday, January 19, 2013

விவசாயம் போற்றுவோம்

இந்தியாவின் முதுகெலும்பு கிராமம் கிராமத்தின் முதுகெலும்பு விவசாயம் .நியாயப்படி பார்த்தால் உணவு பண்டங்கள் விற்கும் விலைக்கு ஒரு விவசாயியே நம் நாட்டின் பெரும் பணக்காரனாய் இருந்திருக்க வேண்டும். இங்கே நிலையோ தலைகீழ்
    மிகபெரும் பணக்காரராய் ஆவது இருக்கட்டும் தன வாழ்கையை  ஓட்டுவதற்காவது வழி வகுத்தால் நலம். விவசாயத்தை போற்றவேண்டிய அரசோ அவர்களை விரட்டி அந்த நிலத்தை அந்நிய முதலாளிகளுக்கு விற்பதில் குறியாய் உள்ளனர். வேறு எந்த நாட்டில்லாவது இப்படி ஒரு வளத்தை முட்டாள்தனமாய் இழந்திருபார்களா என்று தெரியவில்லை .
   ஒரு மாநில விவசாயிக்கு தண்ணீர் பெற்று தரமுடியாத வக்கற்ற அரசாங்கங்கள் . விளைநிலங்களை நஞ்சு கொட்டகையாகவும் சுடுகாடாகவும் மாற்றிய பெருமை இவர்களையே சாரும்.
      சரி அரசாங்கத்தை விட்டு நம்மை நோக்கி வருவோம் எத்தனை பேர் விவசாயத்தை ஆதரிக்க தயார் ஆதரிப்பு என்றால் நம்மை எறங்கி நாத்து நடவும் களை  பறிக்கவும் சொல்லவில்லை ஒரு விவசாயிக்கு தொழில்நுட்பத்தால் என்ன நன்மை நேர சேமிப்பு இதை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தலாம் . தொழிநுட்பம் என்றவுடன் மரபணு மாற்று பயிர்கள் உயிர்கொல்லி உரங்களை தந்து விடுகின்றனர் இயற்கை விவசாயத்தில் தொழில்நுட்பத்தை புகுத்தி ஏதேனும் உதவலாம் தெரிந்தவர்கள் . தெரியாதவர்கள் விவசாயம் பற்றி சிறு பதிவேனும் பகிரலாம்

                                மரம் வளர்ப்போம் மண் வளம் காப்போம்