Wednesday, September 24, 2014

ஈன்றபொழுதின் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்.

மங்கள்யான் ........ எதோ ஒரு பத்து மாதத்திற்கு முன் உருவான   கருவை பற்றி அப்போது பேச்சுக்கள் இருந்தது .....பத்தில் ஒன்றாக .....

இன்றோ நாட்டில் அனைவரையும் பெருமை படுத்தி வீறு நடை போட முக்கிய காரணியாய் மாறியது அந்த குழந்தை ....

  ஒரு தேவை இல்லாத விஷயத்துக்கு இவ்வளவு செலவா .... நாட்டில் உன்ன உணவு இல்லை இது போன்ற ஆடம்பர செலவு தேவையா ..... என்ன செய்ய போகுது மங்கள்யான் .... இது போன்ற ஏகப்பட்ட கேள்விகள் ...........

மங்கள்யான் என்ன செய்தது என்ன செய்ய போகிறது சத்தியமா எனக்கு அது பத்தி தெரியாது அந்த அளவுக்கு அறிவும் கெடையாது ........

எதோ எனக்கு எட்டிய வரையில் உலக வல்லரசுகள் என்று மார் தட்டும் நாடுகளும் சரி ........  ஆசிய வல்லரசு ஆக முயலும் நாடுகளும் சரி ...எட்டாத ஒன்றை நாம் அபாரமாக செய்துள்ளோம் நிச்சயம் தலை நிமிர்ந்து வீறு நடை போடும் நாளே இது சந்தேகமே இல்லை.......

இதனால் நாட்டுக்கு என்ன பயன் , ஒரு ஹாலிவுட் திரைப்படம் எடுக்கும் செலவை விட மிக குறைந்த விலையில் ஒரு விண்வெளி பயணம் ... யார் கண்டா பல நாடுகளுக்கு விண்வெளி பயன் சந்தையாய் மாற வாய்ப்புகளும் உண்டு...... ஏற்கனவே நாம் பல வர்த்தக ரீதியான செயற்கைக்கோள்களை நாம் செலுத் ஆரம்பித்தாயிற்று நீங்கள் சொன்ன இதனால் என் மக்களுக்கு என்ன பயன் கண்டிப்பாக பல இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை கூட இருக்கலாம் .............

நல்லதே நடக்கும் .........

எது எப்படியோ யாரும் சாதிக்காததை நாம் செய்து விட்டோம் .....


மங்கள்யானின் இன்றைய செய்கையால் மக்களின் மனநிலை இன்று இதுவே

ஈன்றபொழுதின் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய். .........

வாழ்க பாரதம் ........