Saturday, April 4, 2015

சமூக வலை(ளை)தளம்

நீண்ட நாட்களாய் பதிவிட வேண்டும் என்று எண்ணி கொண்டே இருந்த பதிவு .........நேரமேலான்மையை ஒழுங்காக கையாளாததால் சற்றே மிகவும் தாமதமாகி விட்டது.......
சமுக வலைதள பதிவர்கள் ஆக போராளிகள் எனப்படும் சமூக வலைதள பதிவர்கள் நட்பில் இருக்கும் தோழமைகள்  மற்றும் என்னையும் சேர்த்தே ...... 

  எனக்கு தெரிந்த மற்றும் மற்றவர்களால் பகிரப்படும் பதிவுகள் அனைத்தும் மிகவும் ஒருதலை பட்சமாகவும் இதனால் சமுகத்துக்கு ஏதும் சிறு நன்மை உள்ளதா என்று இன்றளவும் எனக்கு தெரியவில்லை. அவர்களுக்கு இருக்கும் பின்தொடர்பு வட்டத்தை வைத்து பெரிய மாற்றம் இல்லை என்றாலும் எதோ இயன்ற மாற்றத்தை நிறைவேற்றலாம்....

  சில நாட்களுக்கு முன் இந்தியாவின் மகள் என்ற குறும்படம் வெளிவந்தது .... நடிகைளின் படங்களை பகிரும் நாம் இந்தியாவின் மகளை பற்றி ஏதும் பகிரவில்லை அவள் தமிழகத்தின் மகள் இல்லையே என்பதாலோ ......

இந்தியாவின் அரசியல்வாதிகளை நய்யாண்டி செய்கிறோம் ......ஏதோதோ நகைச்சுவை துணுக்குகளாய் பதிவிடுகிறோம் ஒரு ஆயிரத்திற்கு மேல் பிடிதங்களை அள்ளி விடுகிறோம்
ஆனால் இதற்க்கேதேனும் தீர்வை அலசலாமே ஆராயலாமே ... நம்மிடையே உள்ள எதற்கும் பயன்படாத நோட்டா என்னும் அஸ்திரத்தை பலமாக்க பாடுபடலாமே ..........

உலகத்திற்கான அடுத்த அடுத்த மிகப்பெரும் அபாயம் நீரே ஆனால் அந்த நீருக்கான அடுத்த கட்ட முயற்சியாய் எந்த பதிவுகளும் இல்லை... மதுவிற்காக நாம் இடும் பதிவுகளில் சரி பாதி குடிநீருக்காக இட்டாலே எதோ சிறு விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்  என் பதிவு என்ன செய்து விட போகிறது என்ற கேள்வியை முன் வைக்கலாம் ஆனால் சிறுதுளி பெரும் வெள்ளம் என்பதை அந்த நீரை போலவே மறந்து விட்டோம் போல.........
   நம் பதிவு அடுத்த கட்ட முன்னேற்றதிற்கு சிறிதேனும் பயன்பட்டால் சந்தோசமே .நகைச்சுவை இன்றி மனிதன் இல்லை ஒப்புகொள்கிறேன் ஆனால் வெறும் நகைச்சுவை துணுக்குகளை ஆதரிப்பவர்களை மட்டும் உங்கள் பின்தொடர்பாலர்களை ஆக்க வேண்டாம் ........

சிறிதேனும் நம்மை அலசுவோம் #letstakeselfie