Sunday, July 22, 2012

பகுத்தறிவென்பது யாதெனில் ???????????
    நீண்ட நாளாய் எனக்குள்ளும்  மற்றவர்களிடமும் வினவும் வினா.......... ஆனால் சரியான விடையை கூற யாரும் இல்லை....... மீண்டும் பெரியாரே வந்தால் ஒழிய...... சரி நான் என்னோட பகுத்தறிவின் புரிதல்க்கு வருகிறேன்... என் கண்ணோட்டத்தில் பகுத்தறிவென்பது கடவுள் மறுப்பு என்பதில்லை மூட நம்பிக்கை எதிர்ப்பே என நான் நினைக்கிறேன்....    பலநேரங்களில் பெரும் படிப்பை படித்தவர்க்கு பகுத்தறிவு என்பது துளியும் இல்லை என்று நிருபித்துவிடுகின்றனர்... சமிபத்தில் ஒரு போலி துறவியின் மீது பல நிலைகளில் இருந்தும் புகார்மழை புகார் அளித்தவர்கள் தங்களை பெரும் அறிவாளிகளாக காட்டி கொள்கின்றனர்.... நான் நாட்டின் பெரிய பொறியியல் கல்லூரியில் தொண்ணூறுகளின் துவக்கத்தில் படித்திருக்கிறேன் அப்போ நான் எவ்ளோ பெரிய அறிவாளி என்று மார்தட்டிவிட்டு அந்த போலி துறவி என்னை மூளை சலவை செய்து விட்டார் என்று புலம்பல். அவ்வளவு பெரிய அறிவாளி உங்கள் அறிவை ஒருவர் சலவை செய்யும் அளவுக்கு உங்கள் படிப்பறிவு இருக்கிறது....... இதில் தவறு யார் பக்கம் வெறும் புத்தக புழுக்களாக பகுத்து பார்க்க முடியாத அளவுக்கு இருக்கும் நம் கல்வியா....... கடவுளர்க்கும் மனிதர்களுக்கும் வித்தியாசம் தெரியாமல் இருக்கும் நம் மக்களுக்கா..........    இல்லை மக்கள் பகுத்தறிந்தால் தங்கள் பிழைப்பை ஓட்ட முடியாது என்று கருதும் அரசியல்வாதிகளா......... இனியொரு விதி செய்வோம் புதிய விடியலை காண்போம் ................

No comments:

Post a Comment