Saturday, November 8, 2014

கோலா விளம்பரமும் மொபைல் டேட்டாவும்





நமக்கு கத்தி படத்தில் நடித்த விஜய் ஏன் கோலா விளம்பரத்தில் நடித்தார் ... மொபைல் டேட்டாவின் விலையேற்றம் சில பல அற்ப விஷயங்களில் போராட்டங்கள் (முகநூலில் மட்டும்) இதை தாண்டி போராட நம் முதுகெலும்பு ஒன்றும் அவ்வளவு வலுவானதாக இல்லை (என்னையும் சேர்த்தே)....
கொஞ்சம் பின்னோக்கி சென்றால் என்னை மிகவும் கவர்ந்த தேர்தலும் மிகவும் சிந்திக்க வைத்த தேர்தலும் இப்போ நடந்த தேர்தலே ... நிறைய இளைஞர்கள் நம்பிக்கையோடு வாக்களித்த மாதிரியே தெரிந்தாலும் புதியதோர்  விடியலை தேட இளைஞர்கள் முற்படவில்லை என்றே பட்டது
மிகவும் கவலை அளித்தது இளைஞர்களின் சாதி ரீதியான வாக்களிப்பு. இவர்களை நம்பி இப்படி ஒரு பதிவு நேரவிரயமே. எனினும் பேசிவிடுகிறேன்  
மொபைல் டேட்டா விலையேற்றத்தை கவனித்த நாம் அன்றாட தேவையான நீரையும் உணவையும் மறந்தே விட்டோம்... ஏன் நாம் நினைத்தால் ஒரு சில கிராமங்களை தத்தெடுத்து இயற்கை விவசாயத்தை செழிக்க வைக்கலாம் தண்ணீர்க்கான  வழித்தடங்களை காண முயற்சிக்கலாம். நாமும் பேச முயற்சிக்கிறோம் ஆனால் வெறும் முகநூல் பிடித்தங்களுக்கும் பின்னூட்டங்களுக்குமே இலக்காக இருக்கிறது.... நீர் மேலாண்மையும் இயற்கை விவசாயமும் நம் முக்கிய இலக்காய் இருந்தால் நலம்.
கண்டிப்பாக மாற்றம் விரும்பும் இளைஞர்களாய் இருந்தால் கொஞ்சம் முகநூலை தாண்டியும் எட்டி பார்க்கலாம் சினிமாவை களமாய் எடுத்து நம்முடனே மோதுவதை விட எதிரிகளை கண்டு வேரறுத்து களம் காண முற்படலாம் ........
புதியதோர் பாரதம் படைப்போம் ..... மாற்றம் ஒன்றே மாறாதது   

Wednesday, September 24, 2014

ஈன்றபொழுதின் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்.

மங்கள்யான் ........ எதோ ஒரு பத்து மாதத்திற்கு முன் உருவான   கருவை பற்றி அப்போது பேச்சுக்கள் இருந்தது .....பத்தில் ஒன்றாக .....

இன்றோ நாட்டில் அனைவரையும் பெருமை படுத்தி வீறு நடை போட முக்கிய காரணியாய் மாறியது அந்த குழந்தை ....

  ஒரு தேவை இல்லாத விஷயத்துக்கு இவ்வளவு செலவா .... நாட்டில் உன்ன உணவு இல்லை இது போன்ற ஆடம்பர செலவு தேவையா ..... என்ன செய்ய போகுது மங்கள்யான் .... இது போன்ற ஏகப்பட்ட கேள்விகள் ...........

மங்கள்யான் என்ன செய்தது என்ன செய்ய போகிறது சத்தியமா எனக்கு அது பத்தி தெரியாது அந்த அளவுக்கு அறிவும் கெடையாது ........

எதோ எனக்கு எட்டிய வரையில் உலக வல்லரசுகள் என்று மார் தட்டும் நாடுகளும் சரி ........  ஆசிய வல்லரசு ஆக முயலும் நாடுகளும் சரி ...எட்டாத ஒன்றை நாம் அபாரமாக செய்துள்ளோம் நிச்சயம் தலை நிமிர்ந்து வீறு நடை போடும் நாளே இது சந்தேகமே இல்லை.......

இதனால் நாட்டுக்கு என்ன பயன் , ஒரு ஹாலிவுட் திரைப்படம் எடுக்கும் செலவை விட மிக குறைந்த விலையில் ஒரு விண்வெளி பயணம் ... யார் கண்டா பல நாடுகளுக்கு விண்வெளி பயன் சந்தையாய் மாற வாய்ப்புகளும் உண்டு...... ஏற்கனவே நாம் பல வர்த்தக ரீதியான செயற்கைக்கோள்களை நாம் செலுத் ஆரம்பித்தாயிற்று நீங்கள் சொன்ன இதனால் என் மக்களுக்கு என்ன பயன் கண்டிப்பாக பல இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை கூட இருக்கலாம் .............

நல்லதே நடக்கும் .........

எது எப்படியோ யாரும் சாதிக்காததை நாம் செய்து விட்டோம் .....


மங்கள்யானின் இன்றைய செய்கையால் மக்களின் மனநிலை இன்று இதுவே

ஈன்றபொழுதின் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய். .........

வாழ்க பாரதம் ........


Sunday, August 24, 2014

ஆங்கில திரைப்படங்களின் மேன்மை

ஆங்கில திரைப்படங்களில் போல் தமிழ் படங்கள் இருப்பதில்லை அரைத்த மாவையே அரைகின்றனர் என்று நண்பர் ஒருவர் கூறும் போது நீண்ட யோசைனைக்கு உண்டானேன் ... அவர் கேட்ட இன்னொரு கேள்வி ஏன் தமிழ் படங்கள் ஆஸ்கார் விருது வாங்கும் தரத்தில் இல்லை ......

   ஆமாம் அவர் சொன்னது என்னமோ சரி தான் நம்மிடம் அவ்வளவு பொருளோ வியாபார சந்தையும் இல்லை... ஆனால் அவர் சொன்ன அரைத்த மாவு தான் இங்கே கேள்வி......

நான் பார்த்து எனக்கு தெரிந்த வரை ஆங்கில திரைபடத்தின் பிரம்மாண்ட வியாபார சந்தையினால் அவர்கள் அயல் நாட்டு வாசிகளிடம் சண்டைக்கு செல்கின்றனர் ..தேவை இல்லாமல் எதாவது ஒரு விலங்கை கிளப்பிவிட்டு அதை அடக்க இரண்டு மணி நேரம் வீணடிப்பார்கள்...... இல்லையேல் உளவு பார்க்க செல்வார்கள் ......... இதெல்லாம் இல்லாமல் மிசின்களை மோதவிடுவார்கள் ... கேட்டா எதோ physics, chemistry nu சொல்வாங்க ....... அடபாவிகளா அதெல்லாம் வந்து இருந்தா தான் அப்பவே படிச்சிருப்போமே படம் பாக்க போன எடத்துல ஏன்யா பாடம் எடுக்குறீங்க..........
   அந்த உலகத்தை காப்பதுற படத்துக்கு எங்க தமிழ் படங்கள் எவ்வளவோ தேவலாம்.. இரண்டு மணி நேரம் படத்தில் பெரும்பாலும் ஏதோ வாய் அசைப்பாங்க (ஆங்கில வசனங்கள் நமக்கு தான் புரியாதே ) கடைசி அரைமணி நேரம் எதோ பரபரப்பா பண்ணுவாங்க கடைசில படம் முடிஞ்சிடும் ......... ஆனா அவன் ஏன் அதை பண்ணான் ஏன் அது கூட போராடுனான்  சத்தியமா கடைசி வரைக்கும் புரியாது .....

  நம் மொழி படங்கள் போல் அதில் ஒன்ற முடியாது இங்கே நடிகன் வாங்கும் அடிக்கு கண்ணீர் சிந்துவான் ........ பாட்ஷா படத்தில் தலைவர் வாங்கும் அடிகளுக்கு அவர் எப்போ திருப்பி தருவார்னு ஏங்கிய ரசிகர்களை ஆங்கில திரைபடத்தில் காண முடியுமா ......... உணர்ச்சி உயிர் இதை கலந்து தருவதே எங்கள் மொழி திரைப்படங்கள் ....... ஆங்கில படங்கள் மேன்மை பொருந்தியே இருக்கலாம் ஆனால் எங்கள் திரைப்படங்கள் எங்களுக்காக எடுக்க படுபவை அதை நாங்க பாத்துக்குறோம் ... இனிமே தயவு செஞ்சி " we watch only hollywood movies" nu சொல்லாதீங்க பா .........

அப்புறம் அந்த ஆஸ்கார் அவார்ட் அது அமெரிக்க தேசிய விருது அதுக்காக நாம ஏன் படம் எடுக்கணும் .... நம் படங்களுக்கு அங்கீகாரம் தர அவர்கள் யார் .............
  மக்கள் மனதில் நிற்கும் படமே விருது பெரும் படம் .........