Saturday, April 28, 2012

இந்தியாவின் செயற்கைகோள்கள்:


   இந்தியா விண்ணை ஆள்வதில் பெருமை கொள்கிறோம்..பல வின்னூர்த்திகளும் செயற்கைக்கோள்கள் அனுப்புகிறோம். பல லட்சம் கோடிகள் செலவு செய்து விண்ணில் பாயவைக்கிறோம். அதற்க்கு நாம் சொல்வது நாட்டின் பாதுகாப்பு, கல்வி வளர்ச்சி பசுமை புரட்சி... ஆனால் நாம் இதில் எதாவது ஒன்றிளேனும்  தன்னிறைவு அடைந்துள்ளோமா!! ஆம் என்று கூற நிச்சயம் யோசிப்போம்.... இத்தனை பணம் செலவு செய்து தீவிரவாதி ஊடுருவலை கண்டுபிடித்தோமா இல்லை அந்நிய நாட்டில் ஊடுருவும் வழியேனும் கண்டறிந்தோமா இல்லையே அமெரிக்காவோ இல்ல இங்கிலாந்தோ கூற வேண்டும் அப்புறம் எதுக்கு பாதுகாப்பு செயற்கைக்கோள்....
    கல்வி வளர்ச்சி கேட்கவே தேவை இல்லை நம் கல்வியின் தரத்தை கல்வியின் தரம் என்பதைவிட கற்பித்தலின்  தரம் இதனை செயற்கைகோள்களின் உதவியுடன் குறைந்தபட்சம் பெருநகரங்களில் உள்ள கல்வி நிலையங்களையாவது செயற்கைகோள்களுடன் இணைத்திருக்கலாம் இது நடந்திருந்தால் படிப்பது எவ்வளவு சுகமாக இருந்திருக்கும் அப்புறம் எதற்கு கல்விக்கான செயற்கைக்கோள்..........
    பசுமை புரட்சி.. புரட்சி என்ற வார்த்தையை எவ்வளவு கீழ்த்தரமாக சித்தரிக்க முடியுமோ அவ்வளவு தரம் குறைத்து நம்மால் மட்டுமே சித்தரிக்க முடியும்  விவசாய வளர்ச்சி என்றால் நிச்சயம் சிரிப்போம். சில வருடங்களுக்கு முன் பல போகம் அறுவடை செய்த நாம் இன்றோ பூசிகொல்லிகளின் பிடியில் நஞ்சுகளை அறுவடை செய்து கொண்டிருக்கிறோம் இந்த பசுமை செயற்கைகோள்கள் குறைந்தபட்சம் தண்ணீரை கண்டுபிடித்து அதை நதிகலாக்கி அதை இணைக்கவாவது பயன் பட்டு இருந்தால் நிச்சயம் வரவேற்று இருக்கலாம் இந்த இடத்திலும் ஏமாற்றமே மிச்சம்....

   பிறகு எதுக்கு இதனை செயற்கைகோள்கள் விண்ணில் குப்பைகளை சேர்க்கவா இத்தனை கோடிகள். செயற்கைகோள்கள் மக்களுக்கு உதவினால் மட்டுமே அது விஞ்ஞான வளர்ச்சி இல்லை என்றால் அவை விஞ்ஞான குப்பிகலாகவே மிதக்கும்