Monday, December 24, 2012

சச்சின் டெண்டுல்கரின் கடிதம் ரசிகர்களுக்கு ஒரு மொழிபெயர்ப்பு தவறேனும் இருந்தால் மன்னிக்கவும் :(




அன்பார்ந்த ரசிகர்களே .
   ஆழ்ந்த துயரத்துடன் இந்த மடலை அளிக்கிறேன். இங்கிலாந்துடன் அடைந்த தோல்வியால்  உங்களை நான்  ஏமாற்றிவிட்டேன். நீங்க என்னிடம் எதிர்பார்த்தது இதுவல்ல. நான் எப்போதும் என் முழு அற்பணிப்பை என் அணிக்கு அளித்துளேன். என் ஓய்வுக்கு நிர்பந்திக்க படுகிறேன் அவர்கள் கருத்தோடு என்னால் ஒத்து போகமுடியாது. ஆனால் நான் இத்தனை நாள் கடைபிடித்து வந்த தரத்திற்கான ஆட்டம் இப்போது என்னால் தர இயலாததால் என் ரசிகர்களுக்கு பதில் கூறவேண்டிய நிலையில் உள்ளேன்.
என் ஏமாற்றமான செயல்பாடு மற்றும் தொடர் தோல்விகளுக்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்  . ஆனால் நான் இன்னும் என் 16 வயதில் தொடங்கியதை  போலவே தான்  உள்ளேன். நான் என் அறிமுக காலத்தில் செய்ததை தொடர்ந்து தவறாமல் செய்து வருகிறேன். என்னிடம் எந்த மாற்றமும் இல்லை என் அர்பணிப்பு, என் பயிற்சி. ஆனால் என் வயது என்னை நெருக்குகிறது இதனுடன் கடந்த ஐந்து வருடமாக போராடி வருகிறேன்.ஆனால் நான் கடினமான பயிற்சி மூலம் என்னை தொடர்ந்து தயார்படுத்தி சிறந்ததை தர முயல்கிறேன்

 என் சிறு வயதில் இருந்து கிரிக்கெட் தான் என் உலகம் . நானும் வினோத் காம்ப்ளியும் ஹாரிஸ் ஷீல்ட் கோப்பையில் 600 ஓட்டங்கள் குவித்ததை இன்னும் மறக்கவில்லை இன்னும் சில நாட்கள் அந்த என்னங்கலோடே என் நாட்கள் கழியும் . அந்த நாளே நான் இனி என் காலம் வரை கிரிக்கெட் விளையாட முடிவெடுத்தேன், அந்த 14 வயதில் . என் வாழ்நாளில் உணவு, இனிப்பு , சைக்கிள்   வேறெதையும்   விட கிரிக்கெட்டையே  அதிகமாய் நேசித்தேன்
காலங்கள் கடந்து விட்டன நானும் முதிர்ச்சி  அடைந்து விட்டேன் விளையாட்டு வீரனாய் மனிதனாய் அனால் வேட்கை இன்னும் குறையவில்லை. இன்னும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்றே நினைக்கிறேன் களம் காணும் பொழுது எல்லாம் அதுவே என் வாழ்நாளின் மந்திரமாய் உள்ளது. என் வாழ்நாளில் பணம், புகழ் எல்லாம் அடைந்து விட்டேன். என் சாதனைகளை கண்டு பெருமிதம் கொள்கிறேன் ஆனால் உலக கோப்பை எட்டாக்கனியாகவே இருந்தது அதையும் கடைசியில் அடைந்து விட்டேன்
அனால் உலக கோப்பைக்கு பிறகு உண்மையான போராட்டம் தொடங்கியது அது இன்னும் தொடரும் சிறு சருக்கல் . என் ஆசை நிறைவேறிவிட்டது அதானால் நான் வெளியேறவேண்டும் எனவும் என் கனவுகள் நிறைவேறியதால் ஓய்வு பெற சிறந்த தருணம் இதுவே எனவும் கூறினார் . ஆனால் இன்னும் சிறந்த ஆட்டத்தை வெளிபடுத்த முடியும் என்று நம்பினேன் . இளைஞர்களை வழிநடத்த சில அனுபவசாலிகள் தேவை என்று நினைத்தோம்

 எங்கள் எண்ணம் எல்லாம் இளைஞர்களுக்கு சுமுகமான பாதையை உருவாக்கவேண்டும் என்பது தான் ஆனால் எங்கள் எங்கள் சரிவை நாங்கள் கவனிக்கவில்லை
இதுவே எல்லாவற்றுக்கும் ஆணிவேராய் அமைந்தது

ராகுல் லக்ஷ்மன் இருவரையும் ஆஸ்திரேலியா தொடருக்கு பின் இழந்தது கடினமாய் இருந்தது என் ஓய்வை பற்றி சிந்திக்கவும் தொடங்கினேன் . அனால் வங்க தேசத்துடனான சதத்தால் எனக்கு ஒரு பிடிப்பை ஏற்படுத்தியது ஆனால் அதிர்ஷ்டமின்மையால் தோல்வியே மிஞ்சியது, இரண்டு தொடர்களுக்கு பின்னால் இங்கிலாந்துக்கு எதிரான தோல்வியால் மீண்டும் என் ஓய்வை பற்றி பேசத்தொடங்கினார். நான் சுயநலவாதி என்றும் சிறிய அணிகளை தேர்ந்து எடுத்து விளையாடுகிறேன் என்றும் கூற ஆரம்பித்தனர் ஆனால் அது உண்மை அல்ல. என் குழந்தைகளுடன் இந்த காலத்தில் நேரம் செலவிட வேண்டியுள்ளது அதாலா சில போட்டிகளுக்கு நடுவில் ஓய்வெடுத்து கொண்டேன்
நான் சுயநலவாதி என்று ஒத்துகொள்கிறேன் என் வாழ்வின் சிறப்பான பகுதிகள் கிரிக்கே உடனே கழிந்துள்ளது எனக்கு அதை தவிர வேறொன்றும் என்னை வெளிபடுத்தவில்லை.விழித்தவுடன் கிரிக்கெட் பேட் உடன் என் நாள் தொடங்கும் என் கிரிக்கெட் உபகரணங்களை அடுக்கி வைத்து என் நாள் முடியும். இதுவே 25 வருடங்களின் என் வாழ்க்கையை இருந்தது அவ்வளவு எளிதில் இதை விட முடியாது. ஓய்வு பெறுவது என் இறப்பிற்கு சமம் ஏனென்றால் கிரிக்கெட்காக வாழ்ந்து உள்ளேன். உண்மையை சொல்ல போனால் ஓய்வுக்கு பிறகு என்ன செய்வது என்று தெரியவில்லை. என் கிரிக்கெட் வர்ணனையை அல்லது ஒரு நல்ல பயிற்சியாளராய் இருக்க முடியுமா தெரியவில்லை. எதுவும் என்னை கிரிக்கெட் விளையாட்டு  போல் திருப்தி படுத்தாது. நான் நேரியாய் பேர் ஓய்வடைவதை பார்த்துள்ளேன் ஆனால் இப்போது உணர்கிறேன் அவர்களின் உணர்வை

 இது நான் செல்ல வேண்டிய நேரம் என்று உணர்ந்துள்ளேன் நான் என்ன செய்ய  போகிறேன் என்று யோசிக்க சில காலம் தேவைப்படும் , நான் இங்கு சாதனைக்காகவோ இல்லை புகழுக்காகவோ இல்லை கிரிக்கெட்டின் மீதான என் காதலுக்காகவே என் கிரிக்கெட் வாழ்கை தொடங்கிய நாளில் இருந்து . என் ஓய்வை அறிவிக்க சிறிது காலம் தேவைப்படும் . ஒரு கிரிக்கெட் சேவகனாய் என் வேண்டுகோள் இது இதற்க்கு நீங்களும் சம்மதித்தால் சந்தோசமே
நன்றி
சச்சின் ரமேஷ் டெண்டுல்கர்