யார் தவறு??????????
பெரும்பாலான நேரத்தில் நம் தவற்றை மறைக்க மற்றவர்கள் மீது பழியை
சுமத்துவது எளிதாகிவிடுகிறது......... அப்படியே நாம் மிக சுலபாமாக
அரசியல்வாதிகள் மீதும் அரசு அதிகாரிகள் மீதும் போகிற போக்கில் நம் தவற்றை
அவர்கள் மீது இறக்கிவிட்டு நடந்துவிடுகிறோம்.... லஞ்சம் ஊழல் பெருகிவிட்டது
பணம் கொடுக்காமல் இங்கு எதுவும் நடக்காது என்று கூறி பணம் கொடுத்து நம்
காரியத்தை சாதித்து விடுகிறோம். நாம் கொடுக்க ஆரம்பிப்பதால் தான் அவர்கள்
வாங்க பழகினர்.... அரசியலை எடுத்தால் ஒன்று சாக்கடை என்று இயல்பாக
கடந்துவிடுகிறோம் இல்லை யார் வந்தாலும் கொள்ளை தான் அடிக்க போறாங்கனு
சொல்லிடுவோம்.... ஏன் மாற்று அரசியலை நம்மால் சிந்திக்க
முடியவில்லை..........
சென்ற வாரம் பள்ளிகரனையில் குப்பை கிடங்கு தீ பற்றி எரிந்தது அரசு எந்த
நடவடிக்கை எடுக்கல என்பதை போன்று நின்றுவிட்டோம் ஆனால் அதில் நம் தவறை
அப்பட்டமாக மறைத்து விட்டோம் இல்லை மறந்துவிட்டோம் (நமக்கு எது வசதியோ
அது). நம்மில் எத்தனை பேர் மக்கும் குப்பைகளும் மக்காத குப்பைகளும்
பிரித்தளிகிறோம்(என்னையும் சேர்த்து) ஒரு குப்பய நம்மால் சரியாக கையாள
முடியவில்லை...... இதிலும் நம் பங்கு உள்ளது
சென்னையின் பெரும் துயரம் வாட்டி எடுக்கும் வெயில் கொடுமை இல்லை
என்றால் பல பகுதிகளில் மழை நேரங்களில் வெள்ளம் இதுவும் நாம்
கண்மூடித்தனமாக மரங்களை அழிப்பதும் அழித்த மரங்களை வளர்த்தெடுக்க
மறந்ததே...... கூவத்தில் படகு சவாரி செய்த பழைய புகைபடங்களை பார்க்கும்
பொழுது நாம் வளர்கிறோம் என்பதை விட எவ்வளவு விரைவாக வீழ்ந்து
கொண்டிருக்கிறோம் என்பதே தெரிகிறது............. நம் தவற்றை உணர்ந்து
விரைவில் நல் பாதைக்கு செல்ல முற்படுவோம்..... நான் என் தவறை மிக
விரைவில் திருத்த முயற்சிகிறேன்..........
தொடர்ந்து சாடலாம்
............................................