Saturday, June 16, 2012

கல்வி எனும் ???????

கல்வி எனும் ???????
 என் நீண்ட நாளைய ஆதங்கம் இன்றைய பகிர்தலுக்காக கல்வி எனும் என்று ஆரம்பித்தால் பலரும் பலவற்றை சொல்வார்கள் கல்வி எனும் செல்வம் போல இன்னும் சொல்லி கொண்டே போகிறவர்கள் பலர் உள்ளனர் ..... அனால் இன்று வரை கல்வி என்றால் என்ன என்ற புரிதல் இல்லாமலே உள்ளேன் இதற்க்கு முக்கிய பொறுப்பு நம் கல்வி துறைக்கும் நம் பெற்றோருக்குமே........... கல்வி என் பார்வையில் என்ன என்று கூறவே இந்த பதிவு இந்த பதிவு உங்களில் சிலரது மனதை சிறிது உரசினாலும் நாம் செல்ல வேண்டிய தூரம் பெரிது........... பதினான்கு வருடம் பள்ளியில் கல்வி கற்றேன் இன்று வரை தெரியவில்லை எனக்கு எதற்கு அதனை பாடங்கள் என்று மொழி பாடம், வரலாறு, பூகோளம், இயற்பியல், வேதியல் எல்லாம் நமக்கு அவசியாமான பாடங்களே ஆனால் அனைத்தும் கற்று வரலாற்றில் ஒரு அரசன் எந்த ஆண்டு ஆன்றார் என்றோ உப்பின் வேதியல் குறிப்பீடு என்ன வென்றோ இயற்பியலின் சில பல விதிகளோ சற்றும் நினைவில்லை இப்படியான கல்வியை கட்டரு யாருக்கு பயன்.... இதை விட கொடுமை இந்த பதினான்கு வருட கல்வி என் உயர் படிப்புக்கான சிந்தனையை சற்றும் என் மனதில் விதிக்காதது மாபெரும் கொடுமை என் உயர்கல்விக்கு தொலைகாட்சி பெட்டியோ செய்தி நிகழ்ச்சியோ என் தந்தையின் நண்பர்களின் உதவி தேவை படுகிறது இன்றும் விலான்காதது எனக்கு என்ன தெரியும் என்னால் என்ன படிக்க முடியும் என்று அவர்கள் எப்படி அறிவர்........ படிப்புக்கு பின் வேலையாவது நாம் செரியாக தேர்வு செய்கிறோமா விரும்பி ஒரு பாடம் எடுத்தும் அதற்கான பணியை செய்ய முடியாமல் கணினியுடன் உரையாட சென்று விடுகிறோம்....... இயற்பியல்  படித்தவனுக்கு கணினி மொழிக்கும் சம்பந்தம் உண்டா என்று இன்றும் எனக்கு புதிரே.....இத்தனை ஓட்டமும் சமுகத்தின் அவலமே பாவம் பெற்றவர்கள் என்ன செய்வர் அவர்கள் பிள்ளை போட்டியில் முந்த வேண்டும் அதற்காக புத்தக பைக்குள் திணிக்க படும் பிள்ளைகள் ஆகிறோம்... இனி வரும் சமுகம் நல அறிவோடும் பண்போடும் திகழ நாட்டில் முழு முதல் புரட்சி கல்வி புரட்சியாகவே இருக்க வேண்டும் என்பது என் கருத்து என் கருத்தே அன்றி இது கருத்து திணிப்பு அல்ல    


1 comment:

  1. Miga inimayana matrum samugathirku thevaiyana thalaipu...
    Nenga ivatrileye inum eludha valthukal...
    Miga nandraga eduthu solliya dineshirku valuthukal

    ReplyDelete